Kural 139 of 1330
ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய வழுக்கியும் வாயாற் சொலல்.
Ozhukka Mutaiyavarkku Ollaave Theeya Vazhukkiyum Vaayaar Solal
It cannot be that they who 'strict decorum's' law fulfil,E'en in forgetful mood, should utter words of ill
விளக்கம் — மு. வரதராசன்
தீய சொற்களைத் தவறியும் தம்முடைய வாயால் சொல்லும் குற்றம், ஒழுக்கம் உடையவர்க்குப் பொருந்தாததாகும்.
விளக்கம் — சாலமன் பாப்பையா
மறந்தும் தீய சொற்களைத் தம் வாயால் கூறுவது, ஒழுக்கம் உடையவர்க்கு முடியாது.
விளக்கம் — கலைஞர்
தவறியும்கூடத் தம் வாயால் தகாத சொற்களைச் சொல்வது ஒழுக்கம் உடையவர்களிடம் இல்லாத பண்பாகும்
Meaning (English)
Those who study propriety of conduct will not speak evil, even forgetfully.