Thirukkuralagam
Kural 15 of 1330

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே எடுப்பதூஉம் எல்லாம் மழை.

Ketuppadhooum Kettaarkkuch Chaarvaaimar Raange Etuppadhooum Ellaam Mazhai

'Tis rain works all: it ruin spreads, then timely aid supplies; As, in the happy days before, it bids the ruined rise

விளக்கம் — மு. வரதராசன்

பெய்யாமல் வாழ்வைக் கெடுக்க வல்லதும் மழை; மழையில்லாமல் வளம் கெட்டு நொந்தவர்க்கும் துணையாய் அவ்வாறே காக்க வல்லதும் மழையாகும்

விளக்கம் — சாலமன் பாப்பையா

பெய்யாமல் மக்களைக் கெடுப்பதும்; பெய்து கெட்டவரைத் திருத்துவதும் எல்லாமே மழைதான்

விளக்கம் — கலைஞர்

பெய்யாமல் விடுத்து உயிர்களின் வாழ்வைக் கெடுக்கக் கூடியதும், பெய்வதன் காரணமாக உயிர்களின் நலிந்த வாழ்வுக்கு வளம் சேர்ப்பதும் மழையே ஆகும்

Meaning (English)

Rain by its absence ruins men; and by its existence restores them to fortune.

Open the interactive app →