Kural 151 of 1330
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை.
Akazhvaaraith Thaangum Nilampolath Thammai Ikazhvaarp Poruththal Thalai
As earth bears up the men who delve into her breast,To bear with scornful men of virtues is the best
விளக்கம் — மு. வரதராசன்
தன்னை வெட்டுவோரையும் விழாமல் தாங்குகின்ற நிலம் போல், தம்மை இகழ்வாரையும் பொறுப்பதே தலையான பண்பாகும்
விளக்கம் — சாலமன் பாப்பையா
தன்னையே தோண்டினாலும் தோண்டுபவர் விழுந்துவிடாதபடி தாங்கும் நிலம் போலத், தன்னை வார்த்தைகளால் அவமதிப்பவரையும் மதித்துப் பொறுப்பது முதன்மை அறம்
விளக்கம் — கலைஞர்
தன்மீது குழி பறிப்போரையே தாங்குகின்ற பூமியைப் போல் தம்மை இகழ்ந்து பேசுகிறவர்களின் செயலையும் பொறுத்துக் கொள்வதே தலைசிறந்த பண்பாகும்
Meaning (English)
To bear with those who revile us, just as the earth bears up those who dig it, is the first of virtues.