Thirukkuralagam
Kural 152 of 1330

பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை மறத்தல் அதனினும் நன்று.

Poruththal Irappinai Endrum Adhanai Maraththal Adhaninum Nandru

Forgiving trespasses is good always; Forgetting them hath even higher praise;

விளக்கம் — மு. வரதராசன்

வரம்பு கடந்து பிறர் செய்யும் தீங்கை எப்போதும் பொறுக்க வேண்டும்; அத் தீங்கை நினைவிலும் கொள்ளாமல் மறந்து விடுதல் பொறுத்தலை விட நல்லது.

விளக்கம் — சாலமன் பாப்பையா

தீமையைத் தண்டிக்க முடியும் என்றபோதும் பொறுத்துக் கொள்க; அந்தத் தீமையை மனத்துள் வைக்காமல் மறந்தே விடுவது பொறுத்தலையும் விட நல்லது.

விளக்கம் — கலைஞர்

அளவுகடந்து செய்யப்பட்ட தீங்கைப் பொறுத்துக் கொள்வதைக் காட்டிலும், அந்தத் தீங்கை அறவே மறந்து விடுவதே சிறந்த பண்பாகும்

Meaning (English)

Bear with reproach even when you can retaliate; but to forget it will be still better than that.

Open the interactive app →