Kural 159 of 1330
துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய் இன்னாச்சொல் நோற்கிற் பவர்.
Thurandhaarin Thooimai Utaiyar Irandhaarvaai Innaachchol Norkir Pavar
They who transgressors' evil words endureWith patience, are as stern ascetics pure
விளக்கம் — மு. வரதராசன்
வரம்பு கடந்து நடப்பவரின் வாயில் பிறக்கும் கொடுஞ்சொற்களைப் பொறுத்துக் கொள்பவர், துறந்தவரைப் போலத் தூய்மையானவர் ஆவர்.
விளக்கம் — சாலமன் பாப்பையா
நெறி கடந்து தீய சொற்களால் திட்டுபவரையும் பொறுத்துக் கொள்பவர். இல்வாழ்க்கையில் வாழ்ந்தாலும் துறவியைப் போலத் தூயரே.
விளக்கம் — கலைஞர்
எல்லை கடந்து நடந்து கொள்பவர்களின் கொடிய சொற்களைப் பொறுத்துக் கொள்பவர்கள் தூய்மையான துறவிகளைப் போன்றவர்கள்
Meaning (English)
Those who bear with the uncourteous speech of the insolent are as pure as the ascetics.