Thirukkuralagam
Kural 160 of 1330

உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும் இன்னாச்சொல் நோற்பாரின் பின்.

Unnaadhu Norpaar Periyar Pirarsollum Innaachchol Norpaarin Pin

Though 'great' we deem the men that fast and suffer pain,Who others' bitter words endure, the foremost place obtain

விளக்கம் — மு. வரதராசன்

உணவு உண்ணாமல் நோன்பு கிடப்பவர், பிறர் ‌சொல்லும் கொடுஞ் சொற்களைப் பொறுப்பவர்க்கு அடுத்த நிலையில்தான் பெரியவர் ஆவர்.

விளக்கம் — சாலமன் பாப்பையா

பிறர் சொல்லும் தீய சொற்களைப் பொறுத்துக் கொள்பவருக்கும் பின்புதான் விரதம் காரணமாக உணவைத் தவிர்த்து நோன்பு இருப்பவர் பெரியவர் ஆவார்.

விளக்கம் — கலைஞர்

பசி பொறுத்து உண்ணாநோன்பு இருக்கும் உறுதி படைத்தவர்கள்கூடப் பிறர்கூறும் கொடுஞ்சொற்களைப் பொறுத்துக் கொள்பவர்களுக்கு, அடுத்த நிலையில் தான் வைத்துப் போற்றப்படுவார்கள்

Meaning (English)

Those who endure abstinence from food are great, next to those who endure the uncourteous speechof others.

Open the interactive app →