Thirukkuralagam
Kural 163 of 1330

அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம் பேணாது அழுக்கறுப் பான்.

Aranaakkam Ventaadhaan Enpaan Piranaakkam Penaadhu Azhukkarup Paan

Nor wealth nor virtue does that man desire 'tis plain,Whom others' wealth delights not, feeling envious pain

விளக்கம் — மு. வரதராசன்

தனக்கு அறமும் ஆக்கமும் விரும்பாதவன் என்று கருதத் தக்கவனே, பிறனுடைய ஆக்கத்தைக் கண்டு மகிழாமல் அதற்காகப் பொறாமைப்படுவான்.

விளக்கம் — சாலமன் பாப்பையா

பிறர் உயர்வு கண்டு மகிழாமல் பொறாமைப்படுபவன், அறத்தால் வரும் புண்ணியத்தை வேண்டா என மறுப்பவன் ஆவான்

விளக்கம் — கலைஞர்

அறநெறியையும், ஆக்கத்தையும் விரும்பிப் போற்றாதவன்தான், பிறர் பெருமையைப் போற்றாமல் பொறாமைக் களஞ்சியமாக விளங்குவான்

Meaning (English)

Of him who instead of rejoicing in the wealth of others, envies it, it will be said “he neither desires virtue not wealth.”

Open the interactive app →