Kural 164 of 1330
அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின் ஏதம் படுபாக்கு அறிந்து.
Azhukkaatrin Allavai Seyyaar Izhukkaatrin Edham Patupaakku Arindhu
The wise through envy break not virtue's laws,Knowing ill-deeds of foul disgrace the cause
விளக்கம் — மு. வரதராசன்
பொறாமைப்படுதலாகிய தவறான நெறியில் துன்பம் ஏற்படுதை அறிந்து, பொறாமை காரணமாக அறமல்லாதவைகளைச் செய்யார் அறிவுடையோர்.
விளக்கம் — சாலமன் பாப்பையா
பொறாமை கொண்டால் துன்பம் வரும் என்பதை அறிந்து அறிவுடையோர் பொறாமை காரணமாகத் தீமைகளைச் செய்யமாட்டார்
விளக்கம் — கலைஞர்
தீய வழியில் சென்றால் துன்பம் ஏற்படுமென்பதை அறிந்தவர்கள் பொறாமையினால் தீச்செயல்களில் ஈடுபடமாட்டார்கள்
Meaning (English)
(The wise) knowing the misery that comes from transgression will not through envy commit unrighteous deeds.