Thirukkuralagam
Kural 166 of 1330

கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம் உண்பதூஉம் இன்றிக் கெடும்.

Kotuppadhu Azhukkaruppaan Sutram Utuppadhooum Unpadhooum Indrik Ketum

Who scans good gifts to others given with envious eye,His kin, with none to clothe or feed them, surely die

விளக்கம் — மு. வரதராசன்

பிறர்க்கு உதவியாகக் கொடுக்கப்படும் பொருளைக் கண்டு பொறாமைப்படுகின்றவனுடைய சுற்றம், உடையும் உணவும் இல்லாமல் கெடும்.

விளக்கம் — சாலமன் பாப்பையா

பிறர்க்குக் கொடுப்பதைக் கண்டு பொறாமைப் படுகிறவனின் குடும்பம், உடுக்கவும், உண்ணவும் இல்லாமல் அலையும்.

விளக்கம் — கலைஞர்

உதவியாக ஒருவருக்குக் கொடுக்கப்படுவதைப் பார்த்துப் பொறாமை கொண்டால் அந்தத் தீய குணம், அவனை மட்டுமின்றி அவனைச் சார்ந்திருப்போரையும் உணவுக்கும், உடைக்கும்கூட வழியில்லாமல் ஆக்கிவிடும்

Meaning (English)

He who is envious at a gift (made to another) will with his relations utterly perish destitute of food and rainment.

Open the interactive app →