Thirukkuralagam
Kural 167 of 1330

அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள் தவ்வையைக் காட்டி விடும்.

Avviththu Azhukkaaru Utaiyaanaich Cheyyaval Thavvaiyaik Kaatti Vitum

From envious man good fortune's goddess turns away,Grudging him good, and points him out misfortune's prey

விளக்கம் — மு. வரதராசன்

பொறாமை உடையவனைத் திருமகள் கண்டு பொறாமைப்பட்டுத் தன் தமக்கைக்கு அவனைக் காட்டி நீங்கி விடுவாள்.

விளக்கம் — சாலமன் பாப்பையா

பிறர் உயர்வு கண்டு பொறாமைப்படுபவனைப் பார்க்கும் திருமகள் வெறுப்புக் கொண்டு தன் அக்காள் மூதேவிக்கு அவனை அடையாளம் காட்டிவிட்டு விலகிப் போய்விடுவாள்.

விளக்கம் — கலைஞர்

செல்வத்தை இலக்குமி என்றும், வறுமையை அவளது அக்காள் மூதேவி என்றும் வர்ணிப்பதுண்டு பொறாமைக் குணம் கொண்டவனை அக்காளுக்கு அடையாளம் காட்டிவிட்டுத் தங்கை இலக்குமி அவனைவிட்டு அகன்று விடுவாள்

Meaning (English)

Lakshmi envying (the prosperity) of the envious man will depart and introduce him to her sister.

Open the interactive app →