Thirukkuralagam
Kural 169 of 1330

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் கேடும் நினைக்கப் படும்.

Avviya Nenjaththaan Aakkamum Sevviyaan Ketum Ninaikkap Patum

To men of envious heart, when comes increase of joy,Or loss to blameless men, the 'why' will thoughtful hearts employ

விளக்கம் — மு. வரதராசன்

பொறாமை பொருந்திய நெஞ்சத்தானுடைய ஆக்கமும், பொறாமை இல்லாத நல்லவனுடைய கேடும் ஆராயத் தக்கவை

விளக்கம் — சாலமன் பாப்பையா

பொறாமை கொண்ட மனத்தவனின் உயர்வும், அது இல்லாத நல்லவனின் தாழ்வும் பற்றி ஆராய்க

விளக்கம் — கலைஞர்

பொறாமைக் குணம் கொண்டவனின் வாழ்க்கை வளமாக இருப்பதும், பொறாமைக் குணம் இல்லாதவனின் வாழ்க்கை வேதனையாக இருப்பதும் வியப்புக்குரிய செய்தியாகும்

Meaning (English)

The wealth of a man of envious mind and the poverty of the righteous will be pondered.

Open the interactive app →