Thirukkuralagam
Kural 168 of 1330

அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத் தீயுழி உய்த்து விடும்.

Azhukkaaru Enaoru Paavi Thiruchchetruth Theeyuzhi Uyththu Vitum

Envy, embodied ill, incomparable bane,Good fortune slays, and soul consigns to fiery pain

விளக்கம் — மு. வரதராசன்

பொறாமை என்று கூறப்படும் ஒப்பற்ற பாவி, ஒருவனுடைய செல்வத்தைக் கெடுத்துத் தீய வழியில் அவனைச் செலுத்தி விடும்.

விளக்கம் — சாலமன் பாப்பையா

பொறாமை எனப்படும் ஒப்பில்லாத பாவி எவனிடம் இருக்கிறதோ, அவனது செல்வத்தை அழிப்பதோடு, அவனை நரகத்திலும் அது சேர்க்கும்

விளக்கம் — கலைஞர்

பொறாமை எனும் தீமை ஒருவனுடைய செல்வத்தையும் சிதைத்துத் தீய வழியிலும் அவனை விட்டுவிடும்

Meaning (English)

Envy will destroy (a man’s) wealth (in his world) and drive him into the pit of fire (in the world to come.)

Open the interactive app →