Thirukkuralagam
Kural 175 of 1330

அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும் வெஃகி வெறிய செயின்.

Aqki Akandra Arivennaam Yaarmaattum Veqki Veriya Seyin

What gain, though lore refined of amplest reach he learn,His acts towards all mankind if covetous desire to folly turn

விளக்கம் — மு. வரதராசன்

யாரிடத்திலும் பொருளைக் கவர விரும்பிப் பொருந்தாதவற்றைச் செய்தால், நுட்பமானதாய் விரிவுடையதாய் வளர்ந்த அறிவால் பயன் என்ன?

விளக்கம் — சாலமன் பாப்பையா

பிறர் பொருள் மீது, ஆசை கொண்டு எவரிடத்திலும் அறிவற்ற செயல்களைச் செய்தால் செய்பவரின் கூரிய, பல நூல் பயின்று பரந்த அறிவினால் அவருக்கு ஆகும் பயன்தான் என்ன?

விளக்கம் — கலைஞர்

யாராயிருப்பினும் அவரது உடைமையை அறவழிக்குப் புறம்பாகக் கவர விரும்பினால் ஒருவருக்குப் பகுத்துணரும் நுண்ணிய அறிவு இருந்துதான் என்ன பயன்?

Meaning (English)

What is the advantage of extensive and accurate knowledge if a man through covetousness act senselessly towards all ?

Open the interactive app →