Kural 195 of 1330
சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில நீர்மை யுடையார் சொலின்.
Seermai Sirappotu Neengum Payanila Neermai Yutaiyaar Solin
Gone are both fame and boasted excellence,When men of worth speak of words devoid of sense
விளக்கம் — மு. வரதராசன்
பயனில்லாத சொற்களை நல்ல பண்பு உடையவர் சொல்லுவாரானால், அவனுடைய மேம்பாடு அவர்க்குரிய மதிப்போடு நீங்கிவிடும்.
விளக்கம் — சாலமன் பாப்பையா
இனிய குணத்தவர் பயனற்ற சொற்களைச் சொன்னால், அவர் பெருமையும், புகழும் அப்பொழுதே நீங்கிவிடும்.
விளக்கம் — கலைஞர்
நல்ல பண்புடையவர் பயனில்லாத சொற்களைக் கூறுவாரானால் அவருடைய மேம்பாடு அவர்க்குரிய மதிப்போடு நீங்கி விடும்
Meaning (English)
If the good speak vain words their eminence and excellence will leave them.