Thirukkuralagam
Kural 202 of 1330

தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப் படும்.

Theeyavai Theeya Payaththalaal Theeyavai Theeyinum Anjap Patum

Since evils new from evils ever grow,Evil than fire works out more dreaded woe

விளக்கம் — மு. வரதராசன்

தீயசெயல்கள் தீமையை விளைவிக்கும் தன்மை உடையனவாக இருத்தலால், அத் தீயச் செயல்கள் தீயைவிடக் கொடியனவாகக் கருதி அஞ்சப்படும்.

விளக்கம் — சாலமன் பாப்பையா

நமக்கு நன்மை என்று பிறருக்குச் செய்யும் தீமைகள், நமக்குத் தீமையே தருவதால், தீமைகளைத் தீயினும் கொடியனவாக எண்ணிச் செய்ய அஞ்ச வேண்டும்.

விளக்கம் — கலைஞர்

தீய செயல்களால் தீமையே விளையும் என்பதால் அச்செயல்களைத் தீயை விடக் கொடுமையானவையாகக் கருதி அவற்றைச் செய்திட அஞ்சிட வேண்டும்

Meaning (English)

Because evil produces evil, therefore should evil be feared more than fire.

Open the interactive app →