Kural 203 of 1330
அறிவினுள் எல்லாந் தலையென்ப தீய செறுவார்க்கும் செய்யா விடல்.
Arivinul Ellaan Thalaiyenpa Theeya Seruvaarkkum Seyyaa Vital
Even to those that hate make no return of ill; So shalt thou wisdom's highest law, 'tis said, fulfil
விளக்கம் — மு. வரதராசன்
தம்மை வருத்துவோர்க்கும் தீய செயல்களைச் செய்யாமலிருத்தலை, அறிவு எல்லாவற்றிலும் தலையான அறிவு என்று கூறுவர்.
விளக்கம் — சாலமன் பாப்பையா
தனக்குத் தீமை செய்பவர்க்கும் தீமை செய்யாது இருப்பதே, அறிவில் எல்லாம் முதன்மை அறிவு என்று கூறுவர்.
விளக்கம் — கலைஞர்
தீமை செய்தவர்க்கு அதையே திருப்பிச் செய்யாமலிருத்தலை, எல்லா அறிவிலும் முதன்மையான அறிவு என்று போற்றுவர்
Meaning (English)
To do no evil to enemies will be called the chi ef of all virtues.