Thirukkuralagam
Kural 203 of 1330

அறிவினுள் எல்லாந் தலையென்ப தீய செறுவார்க்கும் செய்யா விடல்.

Arivinul Ellaan Thalaiyenpa Theeya Seruvaarkkum Seyyaa Vital

Even to those that hate make no return of ill; So shalt thou wisdom's highest law, 'tis said, fulfil

விளக்கம் — மு. வரதராசன்

தம்மை வருத்துவோர்க்கும் தீய செயல்களைச் செய்யாமலிருத்தலை, அறிவு எல்லாவற்றிலும் தலையான அறிவு என்று கூறுவர்.

விளக்கம் — சாலமன் பாப்பையா

தனக்குத் தீமை செய்பவர்க்கும் தீமை செய்யாது இருப்பதே, அறிவில் எல்லாம் முதன்மை அறிவு என்று கூறுவர்.

விளக்கம் — கலைஞர்

தீமை செய்தவர்க்கு அதையே திருப்பிச் செய்யாமலிருத்தலை, எல்லா அறிவிலும் முதன்மையான அறிவு என்று போற்றுவர்

Meaning (English)

To do no evil to enemies will be called the chi ef of all virtues.

Open the interactive app →