Kural 218 of 1330
இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார் கடனறி காட்சி யவர்.
Itanil Paruvaththum Oppuravirku Olkaar Katanari Kaatchi Yavar
E'en when resources fall, they weary not of 'kindness due,'-They to whom Duty's self appears in vision true
விளக்கம் — மு. வரதராசன்
ஒப்புரவு அறிந்து ஒழுதலாகியத் தன் கடமை அறிந்த அறிவை உடையவர், செல்வ வளம் இல்லாத காலத்திலும் ஒப்புரவுக்குத் தளர மாட்டார்.
விளக்கம் — சாலமன் பாப்பையா
செய்யவேண்டிய கடமையை அறிந்த அறிவாளிகள், தம்மிடம் கொடுக்க இடம் இல்லாக் காலத்திலும், உழைக்கும் சக்தி அற்றவர்க்கு உதவத் தயங்க மாட்டார்கள்.
விளக்கம் — கலைஞர்
தம்மிடம் வளம் நீங்கி, வறுமை வந்துற்ற காலத்திலும், பிறர்க்கு உதவிடும் ஒப்புரவில் தளராதவர், கடமையுணர்ந்த தகைமையாளர்
Meaning (English)
The wise who know what is duty will not scant their benevolence even when they are without wealth.