Thirukkuralagam
Kural 219 of 1330

நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர செய்யாது அமைகலா வாறு.

Nayanutaiyaan Nalkoorndhaa Naadhal Seyumneera Seyyaadhu Amaikalaa Vaaru

The kindly-hearted man is poor in this alone,When power of doing deeds of goodness he finds none

விளக்கம் — மு. வரதராசன்

ஒப்புரவாகிய நற்பண்பு உடையவன் வறுமை உடையவனாதல், செய்யத்தக்க உதவிகளைச் செய்யாமல் வருந்துகின்ற தன்மையாகும்.

விளக்கம் — சாலமன் பாப்பையா

உழைக்கும் சக்தி அற்றவர்க்கு உதவும் உள்ளம் உடையவன் வறியவன் ஆவது, செய்யக்கூடிய உதவிகளைப் பிறர்க்குச் செய்யமுடியாது வருந்தும் போதுதான்.

விளக்கம் — கலைஞர்

பிறர்க்கு உதவி செய்வதையே கடமையாகக் கொண்ட பெருந்தகையாளன் ஒருவன், வறுமையடைந்து விட்டான் என்பதை உணர்த்துவது அவனால் பிறர்க்கு உதவிட முடியாமல் செயலிழந்து போகும் நிலைமைதான்

Meaning (English)

The poverty of a benevolent man, is nothing but his inability to exercise the same.

Open the interactive app →