Kural 219 of 1330
நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர செய்யாது அமைகலா வாறு.
Nayanutaiyaan Nalkoorndhaa Naadhal Seyumneera Seyyaadhu Amaikalaa Vaaru
The kindly-hearted man is poor in this alone,When power of doing deeds of goodness he finds none
விளக்கம் — மு. வரதராசன்
ஒப்புரவாகிய நற்பண்பு உடையவன் வறுமை உடையவனாதல், செய்யத்தக்க உதவிகளைச் செய்யாமல் வருந்துகின்ற தன்மையாகும்.
விளக்கம் — சாலமன் பாப்பையா
உழைக்கும் சக்தி அற்றவர்க்கு உதவும் உள்ளம் உடையவன் வறியவன் ஆவது, செய்யக்கூடிய உதவிகளைப் பிறர்க்குச் செய்யமுடியாது வருந்தும் போதுதான்.
விளக்கம் — கலைஞர்
பிறர்க்கு உதவி செய்வதையே கடமையாகக் கொண்ட பெருந்தகையாளன் ஒருவன், வறுமையடைந்து விட்டான் என்பதை உணர்த்துவது அவனால் பிறர்க்கு உதவிட முடியாமல் செயலிழந்து போகும் நிலைமைதான்
Meaning (English)
The poverty of a benevolent man, is nothing but his inability to exercise the same.