Kural 231 of 1330
ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு.
Eedhal Isaipata Vaazhdhal Adhuvalladhu Oodhiyam Illai Uyirkku
See that thy life the praise of generous gifts obtain; Save this for living man exists no real gain
விளக்கம் — மு. வரதராசன்
வறியவர்க்கு ஈதல் வேண்டும் அதனால் புகழ் உண்டாக வாழ வேண்டும், அப் புகழ் அல்லாமல் உயிர்க்கு ஊதியமானது வேறொன்றும் இல்லை.
விளக்கம் — சாலமன் பாப்பையா
ஏழைகளுக்குக் கொடுப்பது; அதனால் புகழ் பெருக வாழ்வது; இப்புகழ் அன்றி மனிதர்க்குப் பயன் வேறு ஒன்றும் இல்லை.
விளக்கம் — கலைஞர்
கொடைத் தன்மையும், குன்றாத புகழும்தவிர வாழ்க்கைக்கு ஆக்கம் தரக் கூடியது வேறெதுவும் இல்லை
Meaning (English)
Give to the poor and live with praise. There is no greater profit to man than that.