Kural 238 of 1330
வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும் எச்சம் பெறாஅ விடின்.
Vasaiyenpa Vaiyaththaark Kellaam Isaiyennum Echcham Peraaa Vitin
Fame is virtue's child, they say; if, then,You childless live, you live the scorn of men
விளக்கம் — மு. வரதராசன்
தமக்குப் பின் எஞ்சி நிற்பதாகியப் புகழைப் பெறாவிட்டால் உலகத்தார் எல்லார்க்கும் அத்தகைய வாழ்க்கை பழி என்று சொல்லுவர்.
விளக்கம் — சாலமன் பாப்பையா
புகழ் என்னும் பெரும் செல்வத்தைப் பெறாது போனால், இந்த உலகத்தவர்க்கு அதுவே பழி என்று அறிந்தோர் கூறுவர்.
விளக்கம் — கலைஞர்
தமக்குப் பிறகும் எஞ்சி நிற்கக் கூடிய புகழைப் பெறாவிட்டால், அது அந்த வாழ்க்கைக்கே வந்த பழியென்று வையம் கூறும்
Meaning (English)
Not to beget fame will be esteemed a disgrace by the wise in this world.