Thirukkuralagam
Kural 239 of 1330

வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா யாக்கை பொறுத்த நிலம்.

Vasaiyilaa Vanpayan Kundrum Isaiyilaa Yaakkai Poruththa Nilam

The blameless fruits of fields' increase will dwindle down,If earth the burthen bear of men without renown

விளக்கம் — மு. வரதராசன்

புகழ் பெறாமல் வாழ்வைக் கழித்தவருடைய உடம்பைச் சுமந்த நிலம், வசையற்ற வளமான பயனாகிய விளைவு இல்லாமல் குன்றிவிடும்.

விளக்கம் — சாலமன் பாப்பையா

புகழ் இல்லாத உடம்பைச் சுமந்த பூமி, தன் வளம் மிக்க விளைச்சலில் குறைவு படும்.

விளக்கம் — கலைஞர்

புகழ் எனப்படும் உயிர் இல்லாத வெறும் மனித உடலைச் சுமந்தால், இந்தப்பூமி நல்ல விளைவில்லாத நிலமாகக் கருதப்படும்

Meaning (English)

The ground which supports a body without fame will diminish in its rich produce.

Open the interactive app →