Thirukkuralagam
Kural 240 of 1330

வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய வாழ்வாரே வாழா தவர்.

Vasaiyozhiya Vaazhvaare Vaazhvaar Isaiyozhiya Vaazhvaare Vaazhaa Thavar

Who live without reproach, them living men we deem; Who live without renown, live not, though living men they seem

விளக்கம் — மு. வரதராசன்

தாம் வாழும் வாழ்க்கையில் பழி உண்டாகாமல் வாழ்கின்றவரே உயிர் வாழ்கின்றவர், புகழ் உண்டாகாமல் வாழ்கின்றவரே உயிர் வாழாதவர்.

விளக்கம் — சாலமன் பாப்பையா

தம்மீது பழி இன்றிப் புகழோடு வாழ்பவரே உயிர‌ோடு வாழ்பவர்; புகழ் இன்றிப் பழியோடு வாழ்பவர் இருந்தும் இல்லாதவரே.

விளக்கம் — கலைஞர்

பழி உண்டாகாமல் வாழ்வதே வாழ்க்கை எனப்படும், புகழ் இல்லாதவர் வாழ்வதும் வாழாததும் ஒன்றுதான்

Meaning (English)

Those live who live without disgrace. Those who live without fame live not.

Open the interactive app →