Kural 243 of 1330
அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த இன்னா உலகம் புகல்.
Arulserndha Nenjinaark Killai Irulserndha Innaa Ulakam Pukal
They in whose breast a 'gracious kindliness' resides,See not the gruesome world, where darkness drear abides
விளக்கம் — மு. வரதராசன்
அறியாமையாகிய இருள் பொருந்திய துன்ப உலகில் இருந்து வாழும் வாழ்க்கை, அருள் பொருந்திய நெஞ்சம் உடையவர்களுக்கு இல்லை.
விளக்கம் — சாலமன் பாப்பையா
அருள் நிறைந்த நெஞ்சத்தவர்க்கு, இருட்டான, துன்ப உலகமாகிய நரகம் புகும் நெருக்கடி இல்லை.
விளக்கம் — கலைஞர்
அருள் நிறைந்த மனம் படைத்தவர் அறியாமை எனும் இருள் சூழ்ந்த துன்ப உலகில் உழலமாட்டார்
Meaning (English)
They will never enter the world of darkness and wretchedness whose minds are the abode of kindness.