Kural 282 of 1330
உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக் கள்ளத்தால் கள்வேம் எனல்.
Ullaththaal Ullalum Theedhe Piranporulaik Kallaththaal Kalvem Enal
'Tis sin if in the mind man but thought conceive; 'By fraud I will my neighbour of his wealth bereave.'
விளக்கம் — மு. வரதராசன்
குற்றமானதை உள்ளத்தால் எண்ணுவதும் குற்றமே, அதானால் பிறன் பொருளை அவன் அறியாதப் வகையால் வஞ்சித்துக்கொள்வோம் என்று எண்ணாதிருக்க வேண்டும்.
விளக்கம் — சாலமன் பாப்பையா
அடுத்தவர் பொருளை அவருக்குத் தெரியாமல் திருடுவோம் என்று மனத்தால் நினைப்பதும் தீமையானது.
விளக்கம் — கலைஞர்
பிறருக்குரிய பொருளைச் சூழ்ச்சியினால் கவர்ந்து கொள்ளலாமா என்று ஒருவன் நினைப்பதேகூடக் குற்றமாகும்
Meaning (English)
Even the thought (of sin) is sin; think not then of crafiily stealing the property of another.