Thirukkuralagam
Kural 283 of 1330

களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து ஆவது போலக் கெடும்.

Kalavinaal Aakiya Aakkam Alavirandhu Aavadhu Polak Ketum

The gain that comes by fraud, although it seems to growWith limitless increase, to ruin swift shall go

விளக்கம் — மு. வரதராசன்

களவு செய்து பொருள் கொள்வதால் உண்டாகிய ஆக்கம் பெருகுவது போல் தோன்றி இயல்பாக இருக்க வேண்டிய அளவையும் கடந்து கெட்டு விடும்.

விளக்கம் — சாலமன் பாப்பையா

திருடுவதால் வரும் செல்வம், பெருகுவது போலத் தோன்றி விரைவில் அழியும்.

விளக்கம் — கலைஞர்

கொள்ளயடித்துப் பொருள் குவிப்பது, முதலில் பெரிதாகத் தோன்றினாலும், அந்தச் செயல் ஏற்கனவே இருந்த செல்வத்தையும் அடித்து கொண்டு போய்விடும்

Meaning (English)

The property, which is acquired by fraud, will entirely perish, even while it seems to increase.

Open the interactive app →