Thirukkuralagam
Kural 284 of 1330

களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண் வீயா விழுமம் தரும்.

Kalavinkan Kandriya Kaadhal Vilaivinkan Veeyaa Vizhumam Tharum

The lust inveterate of fraudful gain,Yields as its fruit undying pain

விளக்கம் — மு. வரதராசன்

களவு செய்து பிறர் பொருள் கொள்ளுதலில் ஒருவனுக்கு உள்ள மிகுந்த விருப்பம், பயன் விளையும் போது தொலையாதத் துன்பத்தைத் தரும்.

விளக்கம் — சாலமன் பாப்பையா

அடுத்தவர் பொருளைத் திருடும் ஆசை, நிறைவேறியபின் அழியாத துன்பத்தைத் தரும்.

விளக்கம் — கலைஞர்

களவு செய்வதில் ஒருவனுக்கு ஏற்படும் தணியாத தாகம், அதனால் உருவாகும் விளைவுகளால் தீராத துன்பத்தை உண்டாக்கும்

Meaning (English)

The eager desire of defrauding others will, when it brings forth its fruit, produce undying sorrow.

Open the interactive app →