Thirukkuralagam
Kural 286 of 1330

அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண் கன்றிய காத லவர்.

Alavinkan Nindrozhukal Aatraar Kalavinkan Kandriya Kaadha Lavar

They cannot walk restrained in wisdom's measured bound,In whom inveterate lust of fraudful gain is found

விளக்கம் — மு. வரதராசன்

களவு செய்து பிறர் பொருள் கொள்ளுதலில் மிக்க விருப்பம் உடையவர், அளவு (சிக்கனம்) போற்றி வாழும் நெறியில் நின்று ஒழுக மாட்டார்.

விளக்கம் — சாலமன் பாப்பையா

உயிர்களை நேசிக்கும் ஆசை இல்லாதவரே அடுத்தவர் பொருளைத் திருடும் பேராசை உடையவர் ஆவர்.

விளக்கம் — கலைஞர்

ஓர் எல்லைக்குட்பட்டு வாழ்வைச் செம்மையாக அமைத்துக் கொள்ளாதவர்கள், களவு செய்து பிறர் பொருளைக் கொள்வதில் நாட்டமுடையவராவார்கள்

Meaning (English)

They cannot walk steadfastly, according to rule, who eagerly desire to defraud others.

Open the interactive app →