Thirukkuralagam
Kural 293 of 1330

தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்நெஞ்சே தன்னைச் சுடும்.

Thannenj Charivadhu Poiyarka Poiththapin Thannenje Thannaich Chutum

Speak not a word which false thy own heart knowsSelf-kindled fire within the false one's spirit glows

விளக்கம் — மு. வரதராசன்

ஒருவன் தன் நெஞ்சம் அறிவதாகிய ஒன்றைக்குறித்துப் பொய்ச் சொல்லக்கூடாது, பொய் சொன்னால் அதைக்குறித்துத் தன் நெஞ்சமே தன்னை வருத்தும்.

விளக்கம் — சாலமன் பாப்பையா

பொய் என்று உள்ளம் உணர்த்துவதைச் சொல்ல வேண்டா. சொன்னால், அதைப் பொய் என்று உலகு அறிய நேரும்போது தன் மனமே தன்னைச் சுடும்.

விளக்கம் — கலைஞர்

மனச்சாட்சிக்கு எதிராகப் பொய் சொல்லக்கூடாது; அப்படிச் சொன்னால், சொன்னவரின் மனமே அவரைத் தண்டிக்கும்

Meaning (English)

Let not a man knowingly tell a lie; for after he has told the lie, his mind will burn him (with the memory of his guilt).

Open the interactive app →