Kural 293 of 1330
தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்நெஞ்சே தன்னைச் சுடும்.
Thannenj Charivadhu Poiyarka Poiththapin Thannenje Thannaich Chutum
Speak not a word which false thy own heart knowsSelf-kindled fire within the false one's spirit glows
விளக்கம் — மு. வரதராசன்
ஒருவன் தன் நெஞ்சம் அறிவதாகிய ஒன்றைக்குறித்துப் பொய்ச் சொல்லக்கூடாது, பொய் சொன்னால் அதைக்குறித்துத் தன் நெஞ்சமே தன்னை வருத்தும்.
விளக்கம் — சாலமன் பாப்பையா
பொய் என்று உள்ளம் உணர்த்துவதைச் சொல்ல வேண்டா. சொன்னால், அதைப் பொய் என்று உலகு அறிய நேரும்போது தன் மனமே தன்னைச் சுடும்.
விளக்கம் — கலைஞர்
மனச்சாட்சிக்கு எதிராகப் பொய் சொல்லக்கூடாது; அப்படிச் சொன்னால், சொன்னவரின் மனமே அவரைத் தண்டிக்கும்
Meaning (English)
Let not a man knowingly tell a lie; for after he has told the lie, his mind will burn him (with the memory of his guilt).