Kural 294 of 1330
உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார் உள்ளத்து ளெல்லாம் உளன்.
Ullaththaar Poiyaa Thozhukin Ulakaththaar Ullaththu Lellaam Ulan
True to his inmost soul who lives,- enshrinedHe lives in souls of all mankind
விளக்கம் — மு. வரதராசன்
ஒருவன் தன் உள்ளம் அறியப் பொய் இல்லாமல் நடப்பானானால் அத்தகையவன் உலகத்தாரின் உள்ளங்களில் எல்லாம் இருப்பவனாவான்.
விளக்கம் — சாலமன் பாப்பையா
உள்ளம் அறியப் பொய் சொல்லாமல் ஒருவன் வாழ்ந்தால் அவன் உயர்ந்தவர் உள்ளத்துள் எல்லாம் குடி இருப்பான்.
விளக்கம் — கலைஞர்
மனத்தால்கூடப் பொய்யை நினைக்காமல் வாழ்பவர்கள், மக்கள் மனத்தில் நிலையான இடத்தைப் பெறுவார்கள்
Meaning (English)
He who, in his conduct, preserves a mind free from deceit, will dwell in the minds of all men.