Kural 301 of 1330
செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக் காக்கின்என் காவாக்கால் என்?
Sellitaththuk Kaappaan Sinangaappaan Allitaththuk Kaakkinen Kaavaakkaal En?
Where thou hast power thy angry will to work, thy wrath restrain; Where power is none, what matter if thou check or give it rein
விளக்கம் — மு. வரதராசன்
பலிக்கும் இடத்தில் சினம் வராமல் காப்பவனே சினம் காப்பவன், பலிக்காத இடத்தில் காத்தால் என்ன, காக்கா விட்டால் என்ன?
விளக்கம் — சாலமன் பாப்பையா
எங்கே தன் கோபம் பலிக்குமோ அங்கே கோபம் கொள்ளாதவனே உண்மையாகவே கோபம் கொள்ளாதவன்; பலிக்காத இடத்தில் கோபத்தைத் தடுத்து என்ன? தடுக்காமல் விட்டுத்தான் என்ன?
விளக்கம் — கலைஞர்
தன் சினம் பலிதமாகுமிடத்தில் சினம் கொள்ளாமல் இருப்பவனே சினங்காப்பவன்; பலிக்காத இடத்தில் சினத்தைக் காத்தால் என்ன? காக்காவிட்டால் என்ன?
Meaning (English)
He restrains his anger who restrains it when it can injure; when it cannot injure, what does it matter whether he restrain it, or not ?