Thirukkuralagam
Kural 302 of 1330

செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும் இல்அதனின் தீய பிற.

Sellaa Itaththuch Chinandheedhu Sellitaththum Iladhanin Theeya Pira

Where power is none to wreak thy wrath, wrath importent is ill; Where thou hast power thy will to work, 'tis greater, evil still

விளக்கம் — மு. வரதராசன்

பலிக்காத இடத்தில் (தன்னை விட வலியவரிடத்தில்) சினம் கொள்வது தீங்கு. பலிக்கும் இடத்திலும் (மெலியவரித்திலும்) சினத்தைவிடத் தீயவை வேறு இல்லை.

விளக்கம் — சாலமன் பாப்பையா

பலிக்காத இடத்தில் கோபம் கொள்வது நமக்கே தீமை; பலிக்கும் இடத்தில் கோபம் கொண்டாலும் அதை விடத் தீமை வேறு இல்லை.

விளக்கம் — கலைஞர்

வலியோரிடம் சினம் கொண்டால், அதனால் கேடு விளையும் மெலியோரிடம் சினம் கொண்டாலும் அதைவிடக் கேடு வேறொன்றுமில்லை

Meaning (English)

Anger is bad, even when it cannot injure; when it can injure; there is no greater evil.

Open the interactive app →