Thirukkuralagam
Kural 304 of 1330

நகையும் உவகையும் கொல்லும் சினத்தின் பகையும் உளவோ பிற.

Nakaiyum Uvakaiyum Kollum Sinaththin Pakaiyum Ulavo Pira

Wrath robs the face of smiles, the heart of joy,What other foe to man works such annoy

விளக்கம் — மு. வரதராசன்

முகமலர்ச்சியும் அகமலர்ச்சியும் கொல்லுகின்ற சினத்தை விட ஒருவனுக்கு பகையானவை வேறு உள்ளனவோ?

விளக்கம் — சாலமன் பாப்பையா

முகத்தில் சிரிப்பையும், மனத்துள் மகிழ்ச்சியையும் கொன்றுவிடும் கோபத்தை விட வேறு பகையும் உண்டோ?

விளக்கம் — கலைஞர்

சினம் கொள்கிறவர்களுக்கு முகமலர்ச்சி மாத்திரமின்றி மனமகிழ்ச்சியும் மறைந்து போய் விடும்

Meaning (English)

Is there a greater enemy than anger, which kills both laughter and joy ?

Open the interactive app →