Thirukkuralagam
Kural 303 of 1330

மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய பிறத்தல் அதனான் வரும்.

Maraththal Vekuliyai Yaarmaattum Theeya Piraththal Adhanaan Varum

If any rouse thy wrath, the trespass straight forget; For wrath an endless train of evils will beget

விளக்கம் — மு. வரதராசன்

யாரிடத்திலும் சினம் கொள்ளாமல் அதை மறந்து விட வேண்டும், தீமையான விளைவுகள் அச் சினத்தாலேயே ஏற்படும்.

விளக்கம் — சாலமன் பாப்பையா

தீமை வருவது எல்லாம் கோபத்தால்தான்; அதனால் எவரிடமானாலும் சரி, கோபம் கொள்வதை விட்டுவிடுக.

விளக்கம் — கலைஞர்

யார்மீது சினம் கொண்டாலும் அதை மறந்துவிட வேண்டும் இல்லாவிட்டால் அந்தச் சினமே தீய விளைவுகளுக்குக் காரணமாகும்

Meaning (English)

Forget anger towards every one, as fountains of evil spring from it.

Open the interactive app →