Kural 303 of 1330
மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய பிறத்தல் அதனான் வரும்.
Maraththal Vekuliyai Yaarmaattum Theeya Piraththal Adhanaan Varum
If any rouse thy wrath, the trespass straight forget; For wrath an endless train of evils will beget
விளக்கம் — மு. வரதராசன்
யாரிடத்திலும் சினம் கொள்ளாமல் அதை மறந்து விட வேண்டும், தீமையான விளைவுகள் அச் சினத்தாலேயே ஏற்படும்.
விளக்கம் — சாலமன் பாப்பையா
தீமை வருவது எல்லாம் கோபத்தால்தான்; அதனால் எவரிடமானாலும் சரி, கோபம் கொள்வதை விட்டுவிடுக.
விளக்கம் — கலைஞர்
யார்மீது சினம் கொண்டாலும் அதை மறந்துவிட வேண்டும் இல்லாவிட்டால் அந்தச் சினமே தீய விளைவுகளுக்குக் காரணமாகும்
Meaning (English)
Forget anger towards every one, as fountains of evil spring from it.