Thirukkuralagam
Kural 315 of 1330

அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய் தந்நோய்போல் போற்றாக் கடை.

Arivinaan Aakuva Thunto Piridhinnoi Thannoipol Potraak Katai

From wisdom's vaunted lore what doth the learner gain,If as his own he guard not others' souls from pain

விளக்கம் — மு. வரதராசன்

மற்ற உயிரின் துன்பத்தை தன் துன்பம் போல் கருதிக் காப்பாற்றா விட்டால் பெற்றுள்ள அறிவினால் ஆகும் பயன் உண்டோ.

விளக்கம் — சாலமன் பாப்பையா

அடுத்த உயிர்க்கு வரும் துன்பத்தைத் தமக்கு வந்ததாக எண்ணாவிட்டால், அறிவைப் பெற்றதால் ஆகும் பயன்தான் என்ன?

விளக்கம் — கலைஞர்

பிற உயிர்களுக்கு வரும் துன்பத்தைத் தம் துன்பம் போலக் கருதிக் காப்பாற்ற முனையாதவர்களுக்கு அறிவு இருந்தும் அதனால் எந்தப் பயனுமில்லை

Meaning (English)

What benefit has he derived from his knowledge, who does not endeavour to keep of pain from another as much as from himself ?

Open the interactive app →