Kural 316 of 1330
இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை வேண்டும் பிறன்கண் செயல்.
Innaa Enaththaan Unarndhavai Thunnaamai Ventum Pirankan Seyal
What his own soul has felt as bitter pain,From making others feel should man abstain
விளக்கம் — மு. வரதராசன்
ஒருவன் துன்பமானவை என்று தன் வாழ்க்கையில் கண்டு உணர்ந்தவைகளை மற்றவனிடத்தில் செய்யாமல் தவிர்க்க வேண்டும்.
விளக்கம் — சாலமன் பாப்பையா
தீமை எனத் தான் அறிந்தவற்றை அடுத்தவர்க்குச் செய்யாது இருக்க வேண்டும்.
விளக்கம் — கலைஞர்
ஒருவன் தன்னுடைய வாழ்க்கையில் துன்பமானவை என்று அனுபவித்து அறிந்தவற்றை, மற்றவர்க்குச் செய்யாமலிருக்க வேண்டும்
Meaning (English)
Let not a man consent to do those things to another which, he knows, will cause sorrow.