Thirukkuralagam
Kural 318 of 1330

தன்னுயிர்ககு ஏன்னாமை தானறிவான் என்கொலோ மன்னுயிர்க்கு இன்னா செயல்.

Thannuyirkaku Ennaamai Thaanarivaan Enkolo Mannuyirkku Innaa Seyal

Whose soul has felt the bitter smart of wrong, how canHe wrongs inflict on ever-living soul of man

விளக்கம் — மு. வரதராசன்

தன் உயிருக்குத் துன்பமானவை இவை என்று உணர்ந்தவன், அத் துன்பத்தை மற்ற உயிருக்குச் செய்தல் என்ன காரணத்தாலோ.

விளக்கம் — சாலமன் பாப்பையா

அடுத்தவர் செய்த தீமை தனக்குத் துன்பமானதை அனுபவித்து அறிந்தவன், அடுத்த உயிர்களுக்குத் தீமை செய்ய எண்ணுவது என்ன காரணத்தால்?

விளக்கம் — கலைஞர்

பிறர் தரும் துன்பத்தால் தனக்கேற்படும் துன்பத்தை உணர்ந்தவன் அந்தத் துன்பத்தைப் பிற உயிர்களுக்குத் தரவும் கூடாதல்லவா?

Meaning (English)

Why does a man inflict upon other creatures those suferings, which he has found by experience are sufferings to himself ?

Open the interactive app →