Kural 319 of 1330
பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கு இன்னா பிற்பகல் தாமே வரும்.
Pirarkkinnaa Murpakal Seyyin Thamakku Innaa Pirpakal Thaame Varum
If, ere the noontide, you to others evil do,Before the eventide will evil visit you
விளக்கம் — மு. வரதராசன்
முற்பகலில் மற்றவருக்கு துன்பமானவற்றைச் செய்தால் அவ்வாறு செய்தவர்க்கே பிற்பகலில் துன்பங்கள் தாமாக வந்து சேரும்.
விளக்கம் — சாலமன் பாப்பையா
அடுத்தவர்க்குத் தீமையைக் காலையில் செய்தால், நமக்குத் தீமை நம்மைத் தேடி மாலையில் தானாக வரும்.
விளக்கம் — கலைஞர்
பிறருக்குத் தீங்கு விளைவித்துவிட்டோம் என்று ஒருவர் மகிழ்ந்து கொண்டிருக்கும்போதே, அதேபோன்ற தீங்கு அவரையே தாக்கும்
Meaning (English)
If a man inflict sorrow upon others in the morning, it will come upon him unsought in the very evening.