Kural 320 of 1330
நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார் நோயின்மை வேண்டு பவர்.
Noyellaam Noiseydhaar Melavaam Noiseyyaar Noyinmai Ventu Pavar
O'er every evil-doer evil broodeth still; He evil shuns who freedom seeks from ill
விளக்கம் — மு. வரதராசன்
துன்பம் எல்லாம் துன்பம் செய்தவரையேச் சார்வன, ஆகையால் துன்பம் இல்லாமல் வாழ்தலை விரும்புகின்றவர் பிறர்க்கு துன்பம் செய்யார்.
விளக்கம் — சாலமன் பாப்பையா
செய்யும் தீமை எல்லாம் செய்தவர்க்கே, அதனால் நமக்குத் தீமை வேண்டா என்பவர், அடுத்தவர்க்குத் தீமை செய்யமாட்டார்.
விளக்கம் — கலைஞர்
தீங்கு செய்தவருக்கே தீங்குகள் வந்து சேரும்; எனவே தீங்கற்ற வாழ்வை விரும்புகிறவர்கள், பிறருக்குத் தீங்கிழைத்தல் கூடாது
Meaning (English)
Sorrow will come upon those who cause pain to others; therfore those, who desire to be free from sorrow, give no pain to others.