Thirukkuralagam
Kural 339 of 1330

உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு.

Urangu Vadhupolunj Chaakkaatu Urangi Vizhippadhu Polum Pirappu

Death is sinking into slumbers deep; Birth again is waking out of sleep

விளக்கம் — மு. வரதராசன்

இறப்பு எனப்படுவது ஒருவனுக்குஉறக்கம் வருதலைப் போன்றது, பிறப்பு எனப்படுவது உறக்கம் நீங்கி விழித்துக் கொள்வதைப் போன்றது.

விளக்கம் — சாலமன் பாப்பையா

உறங்குவது போன்றது சாவு; உறங்கி விழிப்பது போன்றது பிறப்பு.

விளக்கம் — கலைஞர்

நிலையற்ற வாழ்க்கையில், உறக்கத்திற்குப் பிறகு விழிப்பதைப் போன்றது பிறப்பு; திரும்ப விழிக்க முடியாத மீளா உறக்கம் கொள்வதே இறப்பு

Meaning (English)

Death is like sleep; birth is like awaking from it.

Open the interactive app →