Thirukkuralagam
Kural 345 of 1330

மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல் உற்றார்க்கு உடம்பும் மிகை.

Matrum Thotarppaatu Evankol Pirapparukkal Utraarkku Utampum Mikai

To those who sev'rance seek from being's varied strife,Flesh is burthen sore; what then other bonds of life

விளக்கம் — மு. வரதராசன்

பிறவித் துன்பத்தைப் போக்க முயல்கின்றவர்க்கு உடம்பும் மிகையான பொருள் ஆகையால் அதற்கு மேல் வேறு தொடர்பு கொள்வது ஏனோ.

விளக்கம் — சாலமன் பாப்பையா

இனியும் பிறப்பது கூடாது என்று பிறப்பை‌யே அறுக்க முயன்றவர்க்கு அவரது உடம்பே அதிகம்; நிலைமை இப்படி இருக்க, உடம்பிற்கும் மேலான சுமை எதற்கு?

விளக்கம் — கலைஞர்

பிறந்ததால் ஏற்படும் துன்பத்தைப் போக்க முயல்கின்ற துறவிகளுக்கு அவர்களின் உடம்பே மிகையான ஒன்றாக இருக்கும்போது, அதற்கு மேலும் வேறு தொடர்பு எதற்காக?

Meaning (English)

What means the addition of other things those who are attempting to cut of (future) births, when even their body is too much (for them).

Open the interactive app →