Thirukkuralagam
Kural 346 of 1330

யான் எனது என்னும் செருக்கு அறுப்பான் வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும்.

Yaan Enadhu Ennum Serukku Aruppaan Vaanorkku Uyarndha Ulakam

Who kills conceit that utters 'I' and 'mine',Shall enter realms above the powers divine

விளக்கம் — மு. வரதராசன்

உடம்பை யான் எனக் கருதலும் தொடர்பு இல்லாத பொருளை எனது எனக்கருதலுமாகிய மயக்கத்தை போக்குகின்றவன், தேவர்க்கும் எட்டாத உயர்ந்த நிலை அடைவான்.

விளக்கம் — சாலமன் பாப்பையா

உடல் பற்றி நான் என்றும், பொருள் பற்றி எனது என்றும் வரும் செருக்கை மனத்துள் இருந்து அறுத்து விட்டவன், வானவர்க்கும் மேலான வீட்டுலகத்தை அடைவான்.

விளக்கம் — கலைஞர்

யான், எனது என்கின்ற ஆணவத்தை அறவே விலக்கி விட்டவன், வான்புகழையும் மிஞ்சுகின்ற உலகப் புகழுக்கு உரியவனாவான்

Meaning (English)

He who destroys the pride which says “I”, “mine” will enter a world which is dificult even to the Gods to attain.

Open the interactive app →