Kural 347 of 1330
பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப் பற்றி விடாஅ தவர் க்கு.
Patri Vitaaa Itumpaikal Patrinaip Patri Vitaaa Thavarkku
Who cling to things that cling and eager clasp,Griefs cling to them with unrelaxing grasp
விளக்கம் — மு. வரதராசன்
யான் எனது என்னும் இருவகைப் பற்றுக்களையும் பற்றிக் கொண்டுவிடாத வரை, துன்பங்களும் விடாமல் பற்றிக்கொள்கின்றன.
விளக்கம் — சாலமன் பாப்பையா
ஆசைகளைப் பற்றிக்கொண்டு விட முடியாமல் இருப்பவரைத் துன்பங்கள் பற்றிக் கொண்டு விடமாட்டா.
விளக்கம் — கலைஞர்
பற்றுகளைப் பற்றிக்கொண்டு விடாதவர்களைத் துன்பங்களும் விடாமல் பற்றிக் கொள்கின்றன
Meaning (English)
Sorrows will never let go their hold of those who give not up their hold of desire.