Thirukkuralagam
Kural 349 of 1330

பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று நிலையாமை காணப் படும்.

Patratra Kanne Pirapparukkum Matru Nilaiyaamai Kaanap Patum

When that which clings falls off, severed is being's tie; All else will then be seen as instability

விளக்கம் — மு. வரதராசன்

இருவகைப் பற்றும் அற்றபொழுதே அந்நிலை பிறவித் துன்பத்தை ஒழிக்கும், இல்லையானால் (பிறவித்துன்பம் மாறி மாறி வந்து) நிலையாமைக் காணப்படும்.

விளக்கம் — சாலமன் பாப்பையா

ஆசைகளை முழுவதுமாக விட்டபோதுதான் பிறப்பு என்னும் கட்டு அறுபடும்; விடவில்லை என்றால், பிறப்பு மறுபடியும் தொடரும்.

விளக்கம் — கலைஞர்

பற்றுகளைத் துறந்துவிட்டால், பிறப்பில் ஏற்படும் இன்ப துன்பங்கள் வருவதில்லை இல்லையேல், அந்த இன்ப துன்பங்கள் மாறிமாறி வரக்கூடிய நிலையாமை தோன்றும்

Meaning (English)

At the moment in which desire has been abandoned, (other) births will be cut of; when that has not been done, instability will be seen.

Open the interactive app →