Thirukkuralagam
Kural 350 of 1330

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு.

Patruka Patratraan Patrinai Appatraip Patruka Patru Vitarku

Cling thou to that which He, to Whom nought clings, hath bid thee cling,Cling to that bond, to get thee free from every clinging thing

விளக்கம் — மு. வரதராசன்

பற்றில்லாதவனாகிய கடவுளுடைய பற்றை மட்டும் பற்றிக் கொள்ள வேண்டும், உள்ள பற்றுக்களை விட்டொழிப்பதற்கே அப் பற்றைப் பற்ற வேண்டும்.

விளக்கம் — சாலமன் பாப்பையா

ஆசை ஏதும் இல்லாதவனாகிய இறைவன் மீது ஆசை கொள்க; அவன் மீது ஆசை கொள்வது நம் ஆசைகளை விடுவதற்கே.

விளக்கம் — கலைஞர்

எதிலும் பற்றில்லாதவராக யார் இருக்கிறாரோ அவரிடம் மட்டும் பற்றுக் கொள்ள வேண்டும் துறவறத்தினர் தம் பற்றுகளை விட்டொழிப்பதற்கு அத்தகையோரிடம் கொள்ளும் பற்றுதான் துணை நிற்கும்

Meaning (English)

Desire the desire of Him who is without desire; in order to renounce desire, desire that desire.

Open the interactive app →