Thirukkuralagam
Kural 418 of 1330

கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால் தோட்கப் படாத செவி.

Ketpinung Kelaath Thakaiyave Kelviyaal Thotkap Pataadha Sevi

Where teaching hath not oped the learner's ear,The man may listen, but he scarce can hear

விளக்கம் — மு. வரதராசன்

கேள்வியறிவால் துளைக்கப் படாத செவிகள், ( இயற்கையான துளைகள் கொண்டு ஓசையைக்) கேட்டறிந்தாலும் கேளாத செவிட்டுத் தன்மை உடையனவே.

விளக்கம் — சாலமன் பாப்பையா

கேள்வி ஞானத்தால் துளைக்கப்படாத செவிகள் ஓசைகளைக் கேட்டாலும் அவை செவிட்டுத் தன்மையவே.

விளக்கம் — கலைஞர்

இயற்கையாகவே கேட்கக்கூடிய காதுகளாக இருந்தாலும் அவை நல்லோர் உரைகளைக் கேட்க மறுத்தால் செவிட்டுக் காதுகள் என்றே கூறப்படும்

Meaning (English)

The ear which has not been bored by instruction, although it hears, is deaf.

Open the interactive app →