Thirukkuralagam
Kural 426 of 1330

எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு அவ்வ துறைவ தறிவு.

Evva Thuraivadhu Ulakam Ulakaththotu Avva Thuraiva Tharivu

As dwells the world, so with the world to dwellIn harmony- this is to wisely live and well

விளக்கம் — மு. வரதராசன்

உலகம் எவ்வாறு நடைபெறுகின்றதோ, உலகத்தோடு பொருந்திய வகையில் தானும் அவ்வாறு நடப்பதே அறிவாகும்.

விளக்கம் — சாலமன் பாப்பையா

உலகத்துப் பெரியோர் எவ்வாறு வாழ்கின்றார்களோ, அவரோடு சேர்ந்து, தானும் அப்படியே வாழ்வது அறிவு.

விளக்கம் — கலைஞர்

உயர்ந்தோர் வழியில் உலகம் எவ்வாறு நடைபெறுகின்றதோ அதற்கேற்ப நடந்து கொள்வதே அறிவாகும்

Meaning (English)

his is to wisely live and well. To live as the world lives, is wisdom.

Open the interactive app →