Thirukkuralagam
Kural 427 of 1330

அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார் அஃதறி கல்லா தவர்.

Arivutaiyaar Aava Tharivaar Arivilaar Aqdhari Kallaa Thavar

The wise discern, the foolish fail to see,And minds prepare for things about to be

விளக்கம் — மு. வரதராசன்

அறிவுடையோர் எதிர்காலத்தில் நிகழப்போவதை முன்னே எண்ணி அறியவல்லார், அறிவில்லாதவர் அதனை அறிய முடியாதவர்.

விளக்கம் — சாலமன் பாப்பையா

அறிவுடையார் நாளை வர இருப்பதை முன் அறிய வல்லவர்; அறிவு இல்லாதவரோ அதனை அறிய இயலாதவர்.

விளக்கம் — கலைஞர்

ஒரு விளைவுக்கு எதிர் விளைவு எப்படியிருக்குமென அறிவுடையவர்கள்தான் சிந்திப்பார்கள்; அறிவில்லாதவர்கள் சிந்திக்க மாட்டார்கள்

Meaning (English)

The wise are those who know beforehand what will happen; those who do not know this are the unwise.

Open the interactive app →