Thirukkuralagam
Kural 429 of 1330

எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை அதிர வருவதோர் நோய்.

Edhiradhaak Kaakkum Arivinaark Killai Adhira Varuvadhor Noi

The wise with watchful soul who coming ills foresee; From coming evil's dreaded shock are free

விளக்கம் — மு. வரதராசன்

வரப்போவதை முன்னே அறிந்து காத்துக் கொள்ளவல்ல அறிவுடையவர்க்கு, அவர் நடுங்கும் படியாக வரக்கூடிய துன்பம் ஒன்றும் இல்லை.

விளக்கம் — சாலமன் பாப்பையா

நாளை வர இருப்பதை முன்னதாக அறிந்து காக்கும் அறிவை உடையோர்க்கு, அவர் நடுங்க வரும் துன்பமே இல்லை.

விளக்கம் — கலைஞர்

வருமுன் அறிந்து காத்துக்கொள்ளும் திறனுடையவர்களுக்கு அதிர்ச்சி தரக்கூடிய துன்பம் ஏற்படாது

Meaning (English)

No terrifying calamity will happen to the wise, who (foresee) and guard against coming evils.

Open the interactive app →