Kural 428 of 1330
அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில்.
Anjuva Thanjaamai Pedhaimai Anjuvadhu Anjal Arivaar Thozhil
Folly meets fearful ills with fearless heart; To fear where cause of fear exists is wisdom's part
விளக்கம் — மு. வரதராசன்
அஞ்சத்தக்கதைக் கண்டு அஞ்சாதிருப்பது அறியாமையாகும், அஞ்சத் தக்கதைக் கண்டு அஞ்சுவதே அறிவுடையவரின் தொழிலாகும்.
விளக்கம் — சாலமன் பாப்பையா
பயப்பட வேண்டியதற்குப் பயப்படாமல் இருப்பது மூடத்தனம்; பயப்படுவது அறிவாளிகளின் செயல்.
விளக்கம் — கலைஞர்
அறிவில்லாதவர்கள்தான் அஞ்ச வேண்டியதற்கு அஞ்ச மாட்டார்கள் அறிஞர்கள் மட்டுமே அஞ்ச வேண்டியதற்கு அஞ்சுவார்கள்
Meaning (English)
Not to fear what ought to be feared, is folly; it is the work of the wise to fear what should be feared.