Thirukkuralagam
Kural 434 of 1330

குற்றமே காக்க பொருளாகக் குற்றமே அற்றந் த்ரூஉம் பகை.

Kutrame Kaakka Porulaakak Kutrame Atran Tharooum Pakai

Freedom from faults is wealth; watch heedfully'Gainst these, for fault is fatal enmity

விளக்கம் — மு. வரதராசன்

குற்றமே ஒருவனுக்கு அழிவை உண்டாக்கும் பகையாகும், ஆகையால் குற்றம் செய்யாமல் இருப்பதே நோக்கமாகக் கொண்டு காத்துக் கொள்ள வேண்டும்.

விளக்கம் — சாலமன் பாப்பையா

அரசிற்கு அழிவுதரும் பகை மனக்குற்றந்தான். அதனால் அக்குற்றம் தன்னிடம் வராமல் காப்பதையே பொருளாகக் கொள்ள வேண்டும்.

விளக்கம் — கலைஞர்

குற்றம் புரிவது அழிவை உண்டாக்கக் கூடிய பகையாக மாறுவதால் குற்றம் புரியாமல் இருப்பது என்பதையே நோக்கமாகக் கொள்ள வேண்டும்

Meaning (English)

Guard against faults as a matter (of great consequence; for) faults are a deadly enemy.

Open the interactive app →